பகீர்!! ஏசி வெடித்ததால் உடல் கருகி உயிரிழப்பு!! தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபம்!!!

 

சென்னையில்  கொளத்தூர், வெற்றி நகர் மணவாளன் தெருவில் வசித்து வருபவர் 28 வயதான ஷியாம். இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து  வந்தார்.இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

வழக்கம் போல்  நேற்று இரவு 8 மணிக்கு ஷ்யாம் வீட்டில் தனது அறையில் ஏ.சி மற்றும் டி.வியை  ஆன் செய்துவிட்டு தூங்கச் சென்றார்.  திடீரென ஏ.சி தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கீழ்தளத்தில் வெடித்த சத்தம் கேட்டு முதல் தளத்தில் இருந்த ஷ்யாமின் அப்பா மற்றும் தம்பி வந்து பார்த்தனர். அதற்குள் அறை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் அறைக்குள் செல்ல முடியவில்லை. உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் திரு.வி.க நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த அறையில் இருந்த ஷியாமை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். அதற்குள் உடல் முழுவதும் தீப்பற்றி ஷ்யாம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் மின் உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?