வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா!!  திரையுலகில் தொடரும் சோகம்!!

 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் பிரபலங்கள், திரைத்துறையினர், மருத்துவர்கள், சாமானியர்கள் என பாகுபாடு இன்றி கொரோனா மிகத் தீவிரமாக பரவி வருகிறது. 


தமிழ் திரையுலகில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மிகவும் பிசியாக  நடித்து வருகிறார். தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இவர் சிம்புவுடன் போடா போடி என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்முறையாக தமிழில் அறிமுகமானார். வரலட்சுமி  விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மாரி 2, சண்டக்கோழி 2, சர்தார்  படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகவும் சிறப்பான  வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்திருந்த சர்தார் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.இவர் கதாநாயகியாக, குணச்சித்திர கேரக்டர்களில் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில்  சிறப்பாக நடித்து வருகிறார். வில்லி கதாபாத்திரங்கள் இவருக்கு சிறப்பாக பொருந்துவதாக இவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.  தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.


37 வயதான இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் முன்னெச்சரிக்கையுடன் இருந்த போதிலும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.  மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களில் தன்னை சந்தித்தவர்கள், கண்டிப்பாக  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?