கதறி அழுது கண்ணீர் வடிக்கும்  பிரதமர்!! வைரலாகும் சர்ச்சை போட்டோ!!

 

 

பின்லாந்து நாடு உலகின் சர்வதேச நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. அந்த நாட்டுக்கு சன்னா மரீன் என்ற 36 வயதான பிரதமர் ஆட்சி நடத்தி வருகிறார். உலகின் இளம்வயது பிரதமர் என்ற பெருமை இவரை சேரும். கடந்த வாரம் பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன் ஒரு சர்ச்சையில் சிக்கினார். பிரதமரின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்ட நிலையில், 2 பெண்கள் கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் வைரலாகின.

இதை பார்த்த பலர் பல்வேறு விதமான கருத்துகளை வெளியிட்டனர். மேலும் ஒரு நாட்டின் பிரதமர் இதுபோன்று பார்ட்டிகளில் கலந்து கொள்வது சரிதானா? அவர் போதைப் பொருள் எடுத்திருக்கக்கூடும் என்று சந்தேகங்களை கிளப்பினார்கள். அதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையில் பிரதமர் சன்னாமரீன் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று முடிவுகள் வந்தன. இதைத்தொடர்ந்து பார்ட்டி குறித்து மரீன் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அவர் கூறும்போது, ‘‘அது ஒரு முறையற்ற புகைப்படம். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது வீட்டில் நடத்தப்பட்ட கெட் டூகெதரில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை’’ என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் கூறும்போது, ‘‘நானும் மனுஷிதான். எனக்கும் ஓய்வு நேரங்கள் உண்டு. ஒருபோதும் நான் என் பணியில் இருந்து தவறியதில்லை. கடந்த வாரம் வேலைபளு எனக்கு அதிகமாக இருந்தது. எனக்கும் தனிப்பட்ட ஆசை, மகிழ்ச்சி வாழ்க்கை எல்லாம் உண்டு.

 

ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட வேலை நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் கவனிப்பார்கள் என்று நாம் நம்புகிறேன்’’ என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.இளம் பெண் பிரதமர் என்று பெயர் பெற்ற மரீன், தனது தனிப்பட்ட விஷயங்களில் மக்கள் இதுபோன்ற கருத்துகளை பதிவிட்டது குறித்து கவலை தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!