காங்கிரஸ் கட்சி பிரமுகர் மரணம்… கே.எஸ்.அழகிரி இரங்கல்… காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு...

 

புவனகிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்   ஜி. பழனிச்சாமி  இன்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'எனது நீண்ட நாளைய நெருங்கிய நண்பரும், புவனகிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான திரு. ஜி. பழனிச்சாமி அவர்கள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனது அரசியல் பயணத்தில் புவனகிரி பகுதியில் என்னோடு இணைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அருமைத் தோழரை இழந்திருக்கிறேன். இந்த இழப்பு தனிப்பட்ட முறையிலும், காங்கிரஸ் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் ஜி. பழனிச்சாமியைப் போன்ற ஒரு செயல்வீரரை காங்கிரஸ் கட்சியில் காண்பது மிகமிக அரிதாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.' என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.