போதையில் தள்ளாடும் பள்ளி மாணவன்!! சீரழியும் இளம் தலைமுறை!! அதிர்ச்சி வீடியோ.!

 

பள்ளியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி வருவதோடு மது போதையில் பள்ளிக்கு செல்வதால் ஆசிரியர்களிடம் தகாராறில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அறங்கேறி வருகிறது. இந்த நிலையில் பள்ளி சீருடையில் மாணவன் ஒருவர் குடித்துவிட்டு தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இதனிடையே பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர், பள்ளி சீருடையில் மது அருந்தி விட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுவதும், அந்த மாணவனை சக மாணவர் ஒருவர் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி வருவதோடு மது போதையில் பள்ளிக்கு செல்வதால் ஆசிரியர்களிடம் தகாராறில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்ந்து அறங்கேறி வருகிறது.