வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி!!  பிரபல நடிகருக்கு சிறை!!

 

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகரும் அவரது தாயாரும் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த நடிகர் சோபி ஜார்ஜ், தனது தாயார் சின்னம்மா மற்றும் பீட்டர் விட்சன் என்ற மூவரும் சேர்ந்து பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பறித்து வந்துள்ளனர்.

ஆனால் வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் இவர்கள் ஏமாற்றியதாக போலிசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் இவர்கள் மூவர் மீதும் வழக்கு பதியப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை, தோப்பும் பாடி கொச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணை   நடைப்பெற்ற நிலையில், மோசடியில் ஈடுப்பட்ட நடிகர் சோபி ஜார்ஜ், அவரது தாயார் சின்னம்மா மற்றும் பீட்டர் விட்சன்   ஆகியோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.   மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாத இரண்டாவது பிரதிவாதியான சோபியின் தாயார் சின்னம்மா ஜார்ஜுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.