குடும்ப தகராறில் வெறிச்செயல்! மகள், மனைவி, மாமியாரை கத்தியால் குத்திய கொடூரம்!

 

ஒரு வினாடி தான். கோபம் தலைக்கேறும் போது, யோசிக்காமல் நாம செய்கிற ஒரு சிறு தவறு, வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது. அலுவலகத்தில் சம்பளத்திற்கு வேலைப் பார்க்கும் நாம் தான் மேலதிகாரியின் அத்தனை முட்டாள்தனங்களையும் பொறுத்துக் கொள்கிறோம். அதே சமயம் குடும்பத்தில் நமக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்யும் சக மனிதர்களிடம், உறவுகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதில்லை. குடும்ப தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் வசித்து வருபவர் சித்தார்த் (37). இவரது மனைவி அதிதி. இந்த தம்திக்கு ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சித்தார்த், தனது மனைவி அதிதி, மகள் மற்றும் மாமியாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘புகாரின் அடிப்படையில் சித்தார்த்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் சித்தார்த்துக்கும், அவரது மனைவி அதிதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சித்தார்த் தனது மனைவி அதிதி, 8 வயது மகள் அவரது மாமியார் மாயாதேவி ஆகிய 3 பெண்களையும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர் 3 பேரையும் நாராயணா மருத்துவமனையில் அனுமதித்தனர். எங்களுக்கும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக விரைந்து சென்று சித்தார்த்தை கைது செய்தோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்பத் தகராறு காரணமாக மனைவி, மகள், மாமியார் ஆகிய 3 பெண்களை கத்தியால் குத்திய வாலிபர் தற்போது சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்புடன் பேசிக் கொள்வது குறைந்துவிட்டது என்று உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!