இன்று முதல் ஆவின் பொருட்கள் அதிரடி விலை உயர்வு!!

 

தமிழகத்தில் அரசு சார்பில் ஆவின் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்  மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களை காட்டிலும் சகாய விலையில் பால்  பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்தில் ஆவின் நிறுவனம் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் பல்வேறு புதிய பொருட்களை அசத்தலாக அறிமுகம் செய்து ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.இந்நிலையில், தற்போது, ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகளின் விலை அதிரடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரூ.45 ஆக இருந்த 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.80ல் இருந்து 20 ரூபாய் அதிகரித்து ரூ.100 ஆக விற்கப்படுகிறது. ரூ.40 ஆக இருந்த 100 கிராம் ரசகுல்லாவின் விலை தற்போது ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் ரசகுல்லா  ரூ.80க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 10 ரூபாய் அதிகரித்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தும் பால்கோவாவின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி 100 கிராம் பால்கோவா விலை ரூ.47ல் இருந்து ரூ.8 அதிகரித்து ரூ.55க்கு விற்கப்படுகிறது. ரூ.120க்கு விற்கப்பட்ட 250 கிராம் பால்கோவா தற்போது ரூ.140 ஆக விலை உயர்ந்துள்ளது. 

ரூ.230 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த 500 கிராம் மைசூர்பாகு தற்போது ரூ.40 அதிகரித்து ரூ.270 ஆக விற்கப்படுகிறது. 250 கிராம் மைசூர்பாகு விலை ரூ.120ல் இருந்து ரூ.20 அதிகரித்து ரூ.140 ஆக விற்பனை செய்யப்படுகிறது. என்று ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பாக இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி வரும் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆவின் இனிப்புகளை வாங்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விலையேற்றம் சற்று கவலை தருவதாக தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!