திருமணம் செய்த 4 நாட்களில் மணமகன் மரணம்!! சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

 

 

தேனி மாவட்டத்தில்  கூடலூர் வெட்டுக்காடு பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரது மகன் ரவிக்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.தான் காதலித்த பெண்ணையே ரவிக்குமார் திருமணம் செய்து கொண்டார். நேற்றிரவு ரவிக்குமார், தன் நண்பர்களை சந்திக்க தான் வேலை செய்த கோழிக்கறி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது நண்பர்கள் போலீசுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்தனர்.  அதில் கோழிக்கறி கடைக்கு சொந்தமான குடோனில் ரவிக்குமார் பிணமாக கிடப்பதாக தெரிவித்தனர்.தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதகைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிகுமாரின் மர்ம மரணம் குறித்து ரவிக்குமாரின் பெற்றோர், மனைவி, நண்பர்கள், கோழிக்கடை உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காதல் திருமணம் முடித்த 4 நாட்களில் வாலிபர் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரவிக்குமாரின் மரணத்திற்கு காரணமானவர்களை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!