ரயில் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

 

மதுரை ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடையில் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த முதியவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ராமேஸ்வரம் வந்ததற்கான பயண சீட்டு இருந்துள்ளது. அதனைவைத்து அவருடைய ஆதார் மூலம் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
எப்போதும் பயணிகள் நடமாட்டம் உள்ள மதுரையில் ரயில் நிலையத்தின் மைய பகுதியில் முதியவர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்யும் வரை யாருக்கும் தெரியாத அளவிற்கு நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் போலீசார் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுத்துவது இல்லையா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பாக ரயிலில் தவறி இளைஞர் உயிரிழந்த நிலையில் இன்று முதியவர் ஒருவர் தற்கொலை என அடுத்தடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!