மகிழ்ச்சி!! நாளை முதல் படிப்படியாக மழை  குறைய வாய்ப்பு!!

 

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும்  காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பலத்த  மழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யலாம் என்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். நவம்பர்  15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை  மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 16ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!