கணவர்- மனைவி போல வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றுகிறார்.. மதபோதகர் மீது பகீர் புகார் !!

 

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் வர்ணிகா. இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த புகாரில், திருமணம் செய்து கொள்வதாக பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்து தன்னை மத போதகர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். 

மதுரையை சேர்ந்த நான் நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருவதாகவும், தன்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாய் கூறி மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் எனக்கு தெரியாமல் மத போதகர் சாமுவேல், சென்னையை சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார்.

என்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றி கொண்டிருக்கிறார். மேலும் நான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளை பேசி என்னை திட்டுகிறார். என்னை பலமுறை அவர் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து வைத்திருக்கிறார். ஏதாவது பேசினால் அந்தப் படங்களை வைத்து என்னை மிரட்டுகிறார். மேலும் எனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.

எனக்கு குடும்ப கஷ்டம் என கூறி ரூ.2 லட்சம் வரை என்னிடம் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் அவரது மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் பிடித்து வருகிறார். மேலும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்தபோது என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். எனவே அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். 
மத போதகர் சாமுவேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக யூடியூப் சேனல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.