ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்களைக் குவித்தது இந்தியா!

 

இந்தியா தலைநிமிர்கிறது. ஒரு காலத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கூட பதக்கப்பட்டியலில் கீழிருந்து மேலாக தேடிய இந்திய அணி இப்போது பல விளையாட்டுகளில் உலகளவில் சாதித்து வருகிறது. அடுத்த தலைமுறை வீறு கொண்டு எழுகின்றது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினா, குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒரே நாளில் 4 தங்கங்களை குவித்தது இந்தியா. ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜோர்டானில் நடைபெற்று வருகின்றன. இதில்  இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன், பா்வீன் ஹூடா, சவீதி, அல்ஃபியா கான் ஆகியோா் தங்கப் பதக்கங்களை அடுத்தடுத்து வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளனர்.  

நவம்பர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் பிரிவு இறுதிச் சுற்றில், 75 கிலோ பிரிவில் லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மிடோவா சோகிபாவை வீழ்த்தியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!