ஜாக்பாட்! டிகிரி முடிச்சவங்களுக்கு ரூ.1,40,000 வரை சம்பளம்! 113 காலி பணியிடங்கள்!

 

டிகிரி படித்தவங்களுக்கு நிஜமாகவே ஜாக்பாட் விஷயம் தான் இது. சம்பளம் ரூ.1,40,000  வரை வாங்கும் வாய்ப்பு. உடனே முந்துங்க. தெளிவா, நிதானமா, தகவல்களை ஒரு முறைக்கு இரு முறையாக படித்துப் பார்த்து அப்ளைப் பண்ணுங்க. இந்திய உணவுக் கழகத்தில் 113 மேலாளர் பணி!! செப்டம்பர் 29 வரை விண்ணப்பிக்கலாம் இந்திய உணவுக் கழகம் மத்திய அரசின் சிறப்பு சட்டம்மூலம் கடந்த 1964-ல் அமைக்கப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நியாயமான விலையில் சந்தைப்படுத்த வும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருட்களை நாடு முழுவதும் சீரான முறையில் விநியோகிக்கவும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாப்பதும் இதன் பணியாகும். இதன்மூலம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகநாட்டின் உணவுப் பாதுகாப்பு இந்த அமைப்பு உறுதி செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய உணவுக் கழகத்தில் பொது, டெபோட், இயக்கம், கணக்கியல், தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் மேலாளர் பணியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலாளர் பணுயிடங்கள்; 113

சம்பளம்: ரூ. 40,000 - 1,40,000

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது ஆகஸ்ட் 1, 2022 தேதியின்படி, 28 முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசின் விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, திவ்யாங் மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணமா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் FCI-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://fci.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முகப்பு பக்கத்தில் உள்ள, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!