கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையர் காலமானார்!!

 

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது  மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் சிவன் கோவில்.  மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில்  ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலை நிர்வகித்து வந்த இணை ஆணையர் டி.காவேரி . இவர் கடந்த மாதத்தில்  உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் காவேரி. அவர் கபாலீஸ்வரர் கோவிலில் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். காவேரி தனது சொந்த பாணியில் நிர்வாகத்தை வழிநடத்தினார்.   கவனம் செலுத்த வேண்டிய சட்ட வழக்குகளில் கவனம் செலுத்தி தனது பணிகளை சிறப்பாக செய்து வந்துள்ளார்.   

இதனிடையே சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், கடந்த மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். இதனால் சக கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சோகம் அடைந்துள்ளனர்.