அட!! ஒரே பிரசவத்தில் 3 கன்றுக்குட்டிகள்!! பெரம்பலூரில் ஆச்சர்யம்!!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அன்னமங்கலம் ஊராட்சியில் முகமதுபட்டினம் கிராமம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் 62 வயதான வெள்ளையன். இவர் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் மாடுகளையும் வளர்த்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் வாங்கிய 2 கன்றுக்குட்டிகளில் ஒன்று வளர்ந்து சினைப்பசுவாக இருந்து வந்தது.
நேற்று முன்தினம் ஒரே சமயத்தில் அந்தப் பசுமாடு 3கன்றுக் குட்டிகளை ஈன்றுள்ளது. மூன்றுமே பெண் கன்றுக் குட்டிகள் என்பதில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி. தாயும் 3 கன்றுகளும் தற்போது நலமாக உள்ளன. இந்த 3 கன்றுக்குட்டிகளையும் கடவுள் தங்களுக்கு அளித்த பரிசாக நினைத்து அவரது குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முகமது பட்டினத்தில் பசு மாடு ஒரே பிரசவத்தில் மூன்று கன்றுக் குட்டிகளை ஈன்றது சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆச்சர்யத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் நேரில் முகவரி விசாரித்து தேடிவந்து பார்த்துச் செல்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?