தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

தமிழகத்தில்  நவம்பர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில்  பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நவம்பர் 1 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ம் தேதிக்கு பிறகு  மழையின் அளவு படிப்படியாக குறையும். அதன் பிறகு மீண்டும் அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த மழை நவம்பர் 4ம் தேதி வரையில் நீடிக்கும் எனவும் சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!