தாயின் கண் முன்னே பரிதாபம்!! டிராக்டர் ஏறி 2 குழந்தைகள் பலி!! 

 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில்  கருநீலம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் எலக்ட்ரிஷன் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 4 வயதில் சித்தார்த், 3 வயதில்  லோகேஷ் என 2 ஆண்குழந்தைகள் இருந்தன.தேன்மொழி தனது இரண்டு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அருகே உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு  வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.


கட்டுப்பாட்டை இழந்ததால்  எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது தேன்மொழி வாகனம் மோதியது. இதனால் தேன்மொழியும் 2 குழந்தைகளும் சாலையில் கீழே விழுந்தனர். அதே நேரத்தில் பின்னால் வந்த டிராக்டர் வாகனம் 2 குழந்தைகள் மீதும் ஏறியது. இதில் தாயின் கண் முன்னே 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து  தகவல் அறிந்ததும் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தாயின் கண்முன்னே இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?