விஷமாக மாறிய உணவு!! பழச்சாறு குடித்த மாணவி உயிரிழப்பு !! தாய் கவலைக்கிடம்!! 

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் மகாலிங்கம் (42). கயத்தாறில் ஓட்டல் நடத்தி வரும் இவருக்கு சாந்தி (40) என்ற மனைவியும், லட்சுமி பிரியா (15) என்ற மகளும் உள்ளனர். இவரது மகள் லட்சுமி பிரியா, நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி சாந்தியும், லட்சுமி பிரியாவும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு பார்சல் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று குடித்தனர். பின்னர் அவர்களுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கயத்தாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரையும் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் லட்சுமி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே, தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக மகாலிங்கம் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லட்சுமி பிரியாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கயத்தாறில் பழச்சாறு குடித்த மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?