சந்தன மரத்தை கடத்த முயன்ற 3 இளைஞர்களை தட்டி தூக்கிய காவல்துறை!! 

 


வனத்துறையினருக்கு அடிக்கடி கிடைக்கும் ரகசிய தகவல்களால் பலர் சிக்குவதும், அவர்களிடம் இருந்து சந்தன மரம் உட்பட  பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. அதேபோல குண்டூர் சுற்றில் அன்சூரை அடுத்த மோரிப்பள்ளம் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த சிலர் முயற்சி செய்வதாக காரமடை வனச்சரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து வனத் துறையினர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தன மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கடத்த முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வனத்துறையினரின் தீவிர ரோந்து பணியில் குண்டூரைச் சேர்ந்த முருகேசன் (35), அன்சூரைச் சேர்ந்த வீரையன் (எ) காளிமுத்து (42), சஞ்சித் (21), சொரண்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஆகிய 4 பேர் பிடிபட்டனர். மேலும் அவர்கள் 10 முதல் 15 செ.மீ சுற்றளவுகள் கொண்ட 15 சிறிய அளவு சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வீரையன், ஆனந்தகுமார், சஞ்சித் ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து சந்தன மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் 3 பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  அடைப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 4வது குற்றவாளியான முருகேசன் தலைமறைவானதையடுத்து தேடும் பணியில் தனிப்படையினர் இறங்கியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் பிடிபட்ட 3 பேரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!