ரூ.500 கோடி பட்ஜெட்ல ராமாயணம்! களமிறங்கும் பிரபல ஹீரோ!

 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி கலெக்‌ஷனை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. தீபாவளி ரிலீஸ் படங்களில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் குப்புற விழுந்ததில், பொன்னியின் செல்வன் படத்திற்கு கூடுதலாக ஒரு வாரத்துக்கான வசூல் வேட்டை என்கிறார்கள். இந்நிலையில், ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ‘ராமாயணம்’ திரைப்படம் வெளிவருவது உறுதி என்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.

வரலாறு மற்றும் புராணங்களை படமாக்குவதில் தெலுங்கு சினிமா எப்போதும் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள், பொன்னியின் செல்வன், பிம்பிசாரா, பத்மாவத் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மகாபாரதத்தை தனது கனவு படமாக அறிவித்துள்ளார். அதேபோன்று அல்லு அர்ஜூன் தனது கனவு படமாக ராமாயணத்தை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுவதால் அல்லு அர்ஜூன் தனது திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.

இது குறித்த கேள்விக்கு அல்லு அர்ஜூன் கூறியதாவது, நான் அறிவித்த ராமாயணம் படம் நின்று விடவில்லை, கைவிடப்படவும் இல்லை.  ஒன்றரை வருடமாக தயாரிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 6 மாதத்துக்குள் இந்த பணி முடிவடைந்து விடும். அடுத்த ஆண்டு ராமாயணம் படப்பிடிப்பு தொடங்கி விடும். 

இந்த படம்  இந்தியாவிலேயே பெரிய படமாகவும், பெரிய பட்ஜெட்டில் எடுத்த படமாகவும் இருக்கும். ராமாயணம் படத்தை நாங்கள் எடுக்க போவதாக அறிவித்த நேரத்தில் பட்ஜெட் ரூ.500 கோடி. இப்போது இந்த மதிப்பீடு இன்னும் அதிகமாகும். இரட்டிப்பு ஆனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஆனால் படம் எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் நடைபெறுகின்றன என்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!