சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மரணம்!! பிரபலங்கள் இரங்கல்!!

 

பிரபல நாவலாசிரியரும் , கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான  டி.பி.ராஜீவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 63.  பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ராஜீவன் நீண்ட நாட்களாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர்  கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். அத்துடன் காங்கிரஸ் கூட்டணி(யுடிஎப்) அரசாங்கத்தில் கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றியவர். அத்துடன் கவிதைகள், பயணக்கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களையும் எழுதியுள்ளார். திரைக்கதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர்.

அவர் எழுதிய 'பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை' நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும், 'கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்' நாவல் 'நியம்' என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  1959ல்  ராஜீவன்  'கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்' நாவலுக்காக 2014ல் கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றவர்.  இது தவிர  அமெரிக்காவில் லெட்டிக் ஹவுஸ் பெல்லோஷிப் மற்றும் ராஸ் பெலோ பவுண்டேஷன் பெல்லோஷிப் இவைகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!