பரபரப்பு தீர்ப்பு!! குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் வீசி கொலை செய்த கொடூரம்!! தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டணை!!

 


நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் குண்டூர்நாடு அடுத்துள்ள அரசம்பட்டி என்ற ஊரில் சிரஞ்சீவி என்பவர் தனது மனைவி பாக்கியத்துடன் வசித்து வருகிறார்.இந்த தம்பதிக்கு 8 வயதில் கிரிதாஸ் என்ற மகனும், 5 வயதில் கவிதர்ஷினி என்ற மகளும் இருந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி ஏற்பட்ட கணவன், மனைவி தகராறு முற்றிப்போனதால் சிரஞ்சீசவி ஆத்திரமடைந்தார். பின்னர் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு செம்மே சீக்குபாறை பகுதியில் உள்ள வியூ பாயிண்ட் மீது சிரஞ்சீவி ஏறி நின்றார். அங்கிருந்து 250 பள்ளத்தில் தனது 2 குழந்தைகளையும் தூக்கி வீசி கொலை செய்து விட்டு ஒன்றும் நடக்காதது போல் வீட்டுக்கு திரும்பி சென்றார்.


வீட்டிற்கு வந்த பின்னர் சிரஞ்சீவி தனது 2 குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்து அழுததால் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரிடம் விசாரித்த போது எந்த பதிலும் சொல்லாமல் இருந்ததால் உடனடியாக பாக்கியம் வாழவந்திநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சிரஞ்சீவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சீக்குபாறை வியூ பாயிண்டில் இருந்து 2 குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி சிரஞ்சீவி தூக்கிவீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் இருக்கும் பொது மக்கள் உதவியுடன் 2 குழந்தைகளின் சடலத்தையும் மீட்டது. இதன் பின்னர் சிரஞ்சீவி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்தது.இந்நிலையில் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிரஞ்சீவிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 2 ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி வழங்கியது. இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!