அதிர்ச்சி!! நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணக்குளியலுக்கு கட்டாயப்படுத்திய கணவன்!! 

 

புனே, மராட்டிய மாநிலம் புனேவில் 30 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாந்திரீகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட கணவரின் குடும்பம் இளம்பெண்ணை பல்வேறு வகையில் துன்புறுத்தியுள்ளார்.  இதன் உச்சகட்டமான செயலில் கணவர் குடும்பம் இறங்கவே இளம் பெண் பொறுமை இழந்து போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.அதில், கணவர், மாமியார், உறவினர்கள் மற்றும் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரீகவாதி உட்பட 4 பேர் மீது குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார்.

இளம் பெண் கடந்த 2013ம் ஆண்டு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் வரதட்சணை கேட்டும், தனக்கு ஆண் குழந்தை பிறக்காததற்காகவும் கணவர் குடும்பம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் மவுலானா பாபா ஜமாதர் என்ற சாமியாரின் பேச்சைக் கேட்டு இளம்பெண் பல்வேறு பூஜை மற்றும் சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணின் கணவருக்கும் கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு மாந்திரீகருக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இளம்பெண்ணுக்கு சூனியம் போன்ற மாந்திரீக பரிகாரங்களும் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.


தொழிலில் லாபம் மற்றும் ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால், கணவர் மற்றும் அவரின் உடன்பிறந்தவர்கள் முன்னால் பொதுவெளியில் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று மாந்திரீகள் பரிகாரம் சொல்லி இருக்கிறார். இதற்கு கட்டுப்பட்ட கணவரின் குடும்பம், இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி ராய்கட்  மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இளம்பெண் முழு நிர்வாணமாக பொது மக்கள் பார்வையில் குளிக்க வற்புறுத்திய போது ஆத்திரமடைந்த இளம்பெண் போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த புனே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மூடநம்பிக்கை காரணமாக இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை புனேயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?