அதிர்ச்சி! தலை தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வர மறுத்ததால் புதுப்பெண் தற்கொலை!

 

தலை தீபாவளி கொண்டாட பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்லாததால், இளம்பெண் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை வடபழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி, அழகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவேக் (வயது 29). இவரது மனைவி சரண்யா (27). உறவு முறையான இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்யா, தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்று கணவன் விவேக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் விவேக் ஊருக்குச் செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா, திடீரென்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேக், சரண்யாவை மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரண்யா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் சரண்யா, விவேக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட கணவன் மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!