அதிர்ச்சி! பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

 

பிரபல மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 44.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவாளர் சுதீஷ், காலமானது ரசிகர்களை அதிர செய்தது. அடுத்தடுத்து திரைப்படங்களில் பணியாற்றி வந்த சுதீஷ் அறிமுகமான சில படங்களிலேயே தனது நேர்த்தியான ஒளிப்பதிவினால், ரசிகர்களைக் கவர துவங்கியிருந்தார். ரசிகர்கள் அனைவரும் செல்லமாக பப்பு என்று அழைத்து மகிழ்ந்தனர். 2001ல் வெளியான ‘சாந்தினி பார்’ என்ற மலையாள படத்தின் மூலமாக உதவி ஒளிப்பதிவாளராக பயணத்தை தொடங்கிய சுதீஷ், 2012ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘செகண்ட் ஷோ’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

அறிமுக படமே ரசிகர்களிடையே சுதீஷை நெருக்கத்தில் அமர வைத்தது. அதனைத் தொடர்ந்து கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக அப்பன் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சுதீஷ் அமிலாய்டோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அமிலாய்டோசிஸ் என்ற புரதத் திரட்சி தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த புரதத் திரட்சி தசை நோயால் சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடல், அகச்சுரப்பிகள், கண்கள், தோல் மற்றும் நரம்பு மண்டலத்தையும் இந்நோய் பாதிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமிலாய்ட் பைப்ரில்ஸ் எனும் அசாதாரண புரதங்கள் திசுக்களில் உருவாவதால் இந்நோய் ஏற்படுகிறது.

மில்லியன் மக்களில் 3 லிருந்து 13 நபர்கள் வரை இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். நோய் பாதித்த 1000ல் ஒருவர் இறக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு, சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சதீஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!