சென்னையில் அதிர்ச்சி! மின்கம்பியைப் பிடித்த படியே இளைஞர் மரணம்!

 

தவறுதலாக உயர் மின் அழுத்த கம்பியில் கைப் பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே இளைஞர் பலியானது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரம் அருகே உள்ள பூத்தப்பேடு பகுதியில் வசித்து வந்தவர் தினேஷ் (30). இவர் அதே பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் எலெக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு மதுபோதையில் வீடு திரும்பிய தினேஷ், மொட்டை மாடிக்கு சென்று உறங்கினார்.

<a href=https://youtube.com/embed/Kn_DNqtgdSA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Kn_DNqtgdSA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

அங்கு மிகத் தாழ்வாக உயா் அழுத்த மின் கம்பி இருந்ததாகத் தெரிகிறது. நள்ளிரவில் கண் விழித்து எழுந்த தினேஷ் தனது கையை மேலே தூக்கிய போது தலைக்கு மேலே சென்ற உயா் அழுத்த மின் கம்பியின் மீது எதிா்பாராத விதமாக அவரது கை பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட தினேஷ், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமாபுரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இச்சம்பவம் போதையில் நடைபெற்றதா, கொலையா, தற்கொலைய என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!