சினிமா பாணியில்  பணத்திற்காக  மாணவனை  கடத்திய  கும்பல்!  அதிர்ச்சி!!

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்தவர் பைனான்ஸ் அதிபர் சிவக்குமார் என்பவரது மகன் சாம்சரன். திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பாலிடெக்னிக் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால் சாம்சரன்  வீட்டில் இருந்துள்ளார். அப்போது  நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்கள் சிலர் சொகுசு காரில்  சாம்சரனை கடத்தி சென்றுள்ளனர்.

 இதனை தொடர்ந்து சாம்சரணின் தந்தை சிவக்குமாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் உனது மகனை ஒப்படைப்போம்.  இதில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தினார்  உனது மகனை  கொன்று விடுவோம் என  சினிமா பாணியில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார்  இது குறித்து பாலக்கோடு டி.எஸ்.பி சிந்துவிடம் ரகசியமாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் டி.எஸ்.பி. சிந்து தனிப்படை அமைத்து, செல்போன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை  தீவீரமாக தேடியுள்ளனர். அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடத்தப்பட்ட மாணவனை மீட்ட போலீசார் கடத்தல் கும்பலை குண்டுகட்டாக கைது செய்தனர்.

 அப்போது கடத்ததில் ஈடுபட்டது சிவக்குமாரின்  பக்கத்து வீட்டுக்காரரான ரித்தீஷ்குமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மாணவனை, பணத்திற்காக கூட்டாளிகள் ஆறு பேர் உதவியுடன் கடத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து சதீஷ்குமாரின் கூட்டாளிகளான அருண்குமார் , விஜி ,சந்தோஷ் ,முரளி ,முருகேசன் , கோகுல் , உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.