மகளிருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கும் அரசு.. விவரம் இதோ!

 

பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் (New Swarnima Scheme For women) சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்..

திட்டத்தின் பெயர்: பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம் (New Swarnima Scheme For women). 

இத்திட்டத்தின் கீழ், உயர்ந்தபட்ச தொகையாக ரூ. 2 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. அதுவும், ஆண்டொன்றுக்கு வெறும் 5% வட்டி விகிதத்தில் தரப்படுகிறது.

அடிப்படைத் தகுதிகள்: தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பெறுவதற்கான  பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமான ரூ. 3 லட்சத்துக்குள் கீழ் இருக்க வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்: இந்த கடன் திட்டத்தில் , பயனாளிகள் பங்களிப்பு எதுவும் செலுத்த தேவையில்லை. ஒட்டு மொத்த கடன் தொகையும் வழங்கப்படுகிறது. பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் தொகையில் பயனாளிகளின் குறைந்தது 5 முதல் 10% வரை பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் அத்தகைய நிபந்தனைகை ஏதும் இல்லை.

இந்த திட்டத்தின் கீழ், ரூ 2 லட்சம், வெறும் 5% வட்டியில் வழங்கப்படுகிறது. இது, ஏனைய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைவானதாகும். கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்: சாதிச் சான்றிதழ் (ம) வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, சிறு  வணிகம் செய்வதற்கான திட்ட அறிக்கை மற்றும் இதர வங்கி கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள: அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , மண்டல மேலாளர் (அல்லது) அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/ நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.