பந்தயத்திற்காக மணமகளுக்கு மேடையிலேயே முத்தமிட்ட மணமகன்..! திருமணத்தை நிறுத்திய மணமகள்! விளையாட்டு வினையானது..!

 

திருமணம் என்பது ஆயிரம் கால பயிர், திருமணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார் என  பல பழமொழி உண்டு. அப்படிப்பட்ட திருமணம் மணமகனின் விளையாட்டு புத்தியால்  நின்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தில் சாம்பல் என்ற பகுதியில் விவேக் என்ற இளைஞருக்கும்,  பட்டதாரி இளம்பெண்ணுக்குமான திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. திருமண நாளன்று இருவரும் மலர் மாலைகளை மாற்றிக்கொண்டதை தொடர்ந்து, மணமகன்   மேடையிலேயே திடீரென மணமகளுக்கு முத்தம் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண், திருமண மண்டபத்தில் திரண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில், தன்னை மணமகன் முத்தமிட்டது அவமானமாக இருப்பதாகக் கூறி, இந்த திருமணமே தனக்கு வேண்டாம் என நிறுத்தியுள்ளார்.

பின்னர் மணமகளை சாமாதானப்படுத்த அவரது தாயார்  முயன்றார் ஆனால் அது பலனளிக்கவில்லை. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் விவேக், தனது நண்பகளுடன் ஏற்பட்ட பந்தயம் காரணமாகவே, மணமேடையிலேயே மணமகளுக்கு முத்தமிட்டதாக விளக்கமளித்துள்ளார். ஆனால், பந்தயத்திற்காக தனக்கு முத்தம் அளித்த மணமகனின் நடத்தையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக மணமகள் குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர் அங்கு வந்த போலிசார்   சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் சடங்குகள் செய்யப்பட்டதன் அடிப்படையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். எனவே இரண்டொரு நாள்கள் கழித்து பிரச்னை தணிந்த பிறகு என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்" எனத் தெரிவித்தனர். இதனால் இருவீட்டாரும் அங்கிருந்து சென்றனர். மணமகன் தனது விளையாட்டு வினையானதை எண்ணிக்கொண்டு அங்கிருந்து சோகத்துடன் சென்றார்.