மனைவியை நடுரோட்டில் கத்தியால் 9 இடத்தில் குத்திக்கொன்ற கணவர்.. பகீர் பின்னணி !

 

மனைவியை பொது இடத்தில் வைத்து 9 முறை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற கணவனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 43), கட்டிட மேஸ்திரி மற்றும் அதே கிராமத்தில் கடப்பா கல் விற்கும் கடை நடத்தி வந்தார்.

ஜெய்சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கத்தால் நாளடைவில் ஜெய்சங்கர் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதன் காரணமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடில் தகராறில் ஈடுபட்டு வந்த ஜெய்சங்கர், தன்னுடைய மனைவி புனிதாவின் நடத்தை மீதிலும் சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனால் புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஜெய்சங்கருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் புனிதா, ஜெய்சங்கரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். பின்னர் குழந்தைகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு புனிதா ஆம்பூரில் உள்ள தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். தனது மனைவிக்காக ஏற்கனவே ஜெய்சங்கர் அந்த இடத்தில் காத்திருந்தார். மேலும், அவர் கையில் கத்தியை மறைத்து வைத்திருந்தார்.

தனது மனைவி புனிதாவை பேருந்து நிறுத்தத்தில் கண்டதும் ஜெய்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ஒரு முறை, இரு முறையல்ல, தொடர்ந்து 9 முறை மனைவி புனிதாவை ஜெய்சங்கர் கத்தியால் மிக கொடூரமாக குத்தியுள்ளார். சரமாரியான கத்துக்குத்துக்கு ஆளான புனிதா சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொது இடத்தில் மனைவியை 9 முறை கத்தியால் குத்திக் கொன்ற ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலைசெய்யப்பட்ட புனிதா, ஜெய்சங்கருக்கு இரண்டாவது மனைவிஆவார். ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (9) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர். தாய் கொலைசெய்யப்பட்டு தந்தை சிறை சென்றதால் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.