உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள்  அதிர்ச்சி!!

 

இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு பிரதான சேமிப்பாக இருந்து வருகிறது.  மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டதிலிருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு நாள் விலை குறைந்தாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விடுகிறது. இதனால் பங்கு சந்தை பயனர்கள், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் தொடர்ந்து தங்கத்தின் விலையை  கவனித்து வருகின்றனர்.

விலை குறையும் நாட்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விடுகிறது. மேலும் தங்கத்தின் விலை உயரும். ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5000வரை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய விலை நிலவரத்தின்படி சவரனுக்கு ரூ440 அதிகரித்து ரூ.39,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.4,875க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி  வெள்ளி விலை  கிலோவிற்கு ரூ 500 அதிகரித்து  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ67.50 ஆகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ67,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!