பேஸ்பால்  மட்டையால்  தாயை அடித்து  கொன்ற   மகன்!! கொடூரத்தின் உச்சம்!!

 

சொத்துக்காக பெற்ற தாயை மகனே கொன்று ஆற்றில் வீசிய அதிர்ச்சி சம்பவம்  மராட்டிய  மாநிலத்தி அரங்கேறியுள்ளது.  மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில்,  கல்பதரு சொசைட்டியின் பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், 74 வயதான மூதாட்டி ஒருவர் காணாமல் போனதாகக் கூறி, ஜூஹூ காவல்துறையில் புகார் அளித்தார்.  அவரது  புகாரின்  அடிப்படையில்,  போலீஸார்   விசாரணையைத்  தொடங்கினர்.

விசாரணையில் மூதாட்டியின் மகன் பன்வேலில் இருந்தபோது மூதாட்டியின் மொபைல் இருப்பிடம் அவரது கட்டிடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், மூதாட்டியின் மகனையும் அவருடைய வேலைக்காரனையும் அழைத்து விசாரித்தனர்.  அதில்,  அவர் சொத்துக்காக தனது தாயின் தலையை பலமுறை பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்றதற்காக வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் அவரது உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள மாத்தேரான் அருகே ஆற்றில் வீசியதாக தெரிவித்தார்.  பின்னர்   மூதாட்டியின் மகனையும், அவருடைய வேலைக்காரனையும் கைது செய்த போலிசார், இதுகுறித்து விசாரணை  நடத்தி  வருகின்றனர். சொத்து  தகராறில், தனது 74 வயது தாயின் தலையை பலமுறை பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.