திருநங்கையுடன் காதல்! மனைவி சம்மதத்துடன் வாலிபர் திருமணம்! ஒரே வீட்டில் வசிக்கும் மூவர்!

 

ஒரே வீட்டில் திருநங்கையுடன் கணவரையும் சேர்த்து வைத்து, வசித்து வரும் மனைவியை அதிர்ச்சியாக பார்க்கிறார்கள் தெருவாசிகள். ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களுக்கு பிடிச்சிருக்கு.. அதனால கல்யாணம் பண்ணி வெச்சேன் என்கிறார் மனைவி. வாலிபர் ஒருவர் திருநங்கையை தனது மனைவியின் ஒப்புதலுடன்  திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தில் வசித்து வருபவர் பஹிர் (32) இவருக்கு திருமணமாகி மனைவி யாமினி மற்றும் 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் பஹிருக்கு கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இவர்களது நட்பு காதலாக மாறியது. இருப்பினும் பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்த நிலையில் அவரது மனைவிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.

இது குறித்து பஹிரின் மனைவி தனது கணவருடன் பேசி ஒரு நல்ல முடிவெடுத்தார். அதன்படி பஹிருக்கும், சங்கீதாவுக்கும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். உறவினர்கள் புடைசூழ கோவில் ஒன்றில் இருவருக்கும் மனைவி யாமினி முன் நின்று திருமணம் செய்து வைத்தார்.

இது குறித்து பஹிரின் மனைவி யாமினி கூறும் போது, ‘‘பஹிர் மற்றும் திருநங்கையான சங்கீதாவுக்கும் அபூர்வமாக திருமணம் நடந்துள்ளது.  இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் நான் திருமணம் செய்து வைத்தேன் என்று யாமனி தெரிவித்தார்’’

வித்தியாசமான இந்த திருமணத்திற்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!