செல்பி எடுக்க மறுத்த பெண்கள்... கலவரத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்!!

 

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில், புத்தாண்டு தொடங்கிய நேற்று இரவு உத்தரபிரதே மாநிலம் நொய்டாவில் உள்ள கவுர் சிட்டி ஃபர்ஸ்ட் அவென்யூ சொசைட்டியில் வசிக்கும் அஜித் குமார், தனது மனைவி மற்றும் அவரது நண்பரின் மனைவியுடன் வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

இதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, குமார் அவரானது நண்பர் ரித்தீஷையும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளார். இந்த தகராறில் தலையிட்டு அவர்களை தடுக்க முயன்ற சிலரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் வாக்குவாதம், சண்டை என்று பிரச்சனை பெரிதானது. உடனே அங்கிருந்தவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சண்டைக்கு காரணமான இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


சண்டையில் சில குடியிருப்புவாசிகள் மற்றும் பாதுகாவலர்களும்  காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.