உனக்கு 20 எனக்கு 40!! மாணவியை கரம் பிடித்த ஆசிரியர்!! வீடியோ வைரல்!!

 

காதலுக்கு கண் இல்லை, காதலுக்கு வயதில்லை என்ற கூற்றுகள் உண்டு. தற்போதைய காலத்தில் ஆண்கள் ஒருவரையொருவர் காதலிப்பதும், பெண்கள் ஒருவரையொருவர் காதலிப்பதும் திருமணம் செய்துக் கொள்வதும், அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதும் சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சம்பவம் தான் பீகாரின் நிகழ்ந்துள்ளது.

பீகாரில் பயிற்சி நிலையத்தின் 42 வயது ஆசிரியர் ஒருவர் அதில் படித்து வந்த 20 வயது மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  பீகாரின் சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக சங்கீத் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். வயது 42. இந்த நிலையில், சுவேதா குமாரி,  வயது 20, என்ற மாணவி ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.