17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!

 

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடக பாஜக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவை கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது 17 வயது மகளுடன் உதவி கேட்டு சந்திக்க சென்றதாகவும், அப்போது எடியூரப்பா, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூரு, சதாசிவ நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் நேற்று நள்ளிரவு, எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.