பேருந்தும்  லாரியும்  நேருக்கு நேர் மோதி  7 பேர் பரிதாப பலி மற்றும் ஒருவர் படுகாயம்!

 

 பீகாரின் ராம்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட முக்கியத் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை நேரத்தில் ஏராளமான  பயணிகளுடன் ஒரு தனியார் சொகுசுப் பேருந்து விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது யாரும் கணிக்க முடியாத வகையில், சாலையில்  எதிரே வந்த ஒரு சரக்கு லாரி, இந்த பயணிகள் பேருந்தின் மீது மிகக் கொடூரமாக நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தின் பயங்கர வேகம் காரணமாக இரு வாகனங்களும் முற்றிலும் நசுங்கியதுடன், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதியில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.   இந்த  மோதலில் சிக்கி மற்றொரு பயணி ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குக் போராடிக் கொண்டிருந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி   பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள், இதுகுறித்து உள்ளூர் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் கொடுத்துவிட்டு மீட்புப் பணிகளில் உடனடியாகத் தீவிரமாக இறங்கினர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராம்கர் போலிசார், படுகாயமடைந்த  பொதுமகன் ஒருவரை மீட்டு அவசரச் சிகிச்சைக்காக அருகில் உள்ள ராம்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலிசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.