10 வருஷம் தவம் இருந்து பெத்த பிள்ள தண்ணியில போச்சே!!  2வயது குழந்தை தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலி!! கதறித் துடித்த பெற்றோர்!!

 

முன்பெல்லாம் கூட்டுக்குடும்பத்தில் அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, தாத்தா , பாட்டி என யாராவது ஒருவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடியே அந்த வீட்டில் உள்ள எல்ல குழந்தைகளையும் கண்காணித்துக் கொள்வர் . இன்று தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் பெற்றோர்களின் பெரிய சவால் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்கிற அளவுக்கு இன்றைய சூழல் மாறிவிட்டது.  சின்னஞ்சிறு இடத்தில் குழந்தைகளை ஒருவரே அல்லது பெற்றோர் இருவர் மட்டுமே பார்த்துக் கொள்ளும் போது சில நேரங்களில் அலட்சிய மனப்போக்கால் தானே விளையாடும் என நினைத்து விட்டு விடுகின்றனர். இதுவே பல நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழக் காரணமாகி விடுகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி  ராதிகா. இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டு வயதான கௌசிகா, வீட்டில் வெளியே விளையாடி கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு கட்டப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டடது.  குழந்தை கத்தி கூச்சலிட்டது. இந்த  அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருதவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். பெற்றோர்களும், உறவினர்களும் கதறி துடித்த அழுத காட்சி காண்பவர் மனதை கரைய வைத்தது.

அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது எனக் கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையை பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல் ஒப்படைக்கப்படும் எனக் கூறினர்.

இருப்பினும் பிரேத பரிசோதனை செய்து குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்ததால், 9 வருடங்களுக்குப் பிறகு, பிறந்த குழந்தை தற்போது பிணமாகிவிட்டது என கூறி கத்தி அழுதனர். இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.