போட்றா வெடிய... அதிரப்போகும் சென்னை... நாளை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்வுகள்!
மெரினாவில் நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையைக் காண மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாக மெரினாவை நோக்கிய காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளை அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சூலூர், தஞ்சாவூர், அரக்கோணம் மற்றும் பெங்களூரு உட்பட பல்வேறு IAF தளங்களைச் சேர்ந்த 72 விமானங்கள் கலந்து கொள்கின்றன. 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் மாபெரும் வான் சாகச நிகழ்ச்சி என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.