அன்னா ஹசாரே உடல்நிலைக் கவலைக்கிடம்... தொண்டர்கள் பிரார்த்தனை!
பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மும்பை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐசியூவில் சிகிச்சைப் பெற்று வரும் அன்னா ஹசாரேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடல்நலம் பெற வேண்டி தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
87 வயதான அண்ணா ஹசாரே வைரஸ் தொற்று, நீரிழப்பு மற்றும் சிறுநீரகச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரான ரலேகன் சித்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல்சிகிச்சை மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிக்காக உடனடியாக மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ள அவர், விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும் தொண்டர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.