பா.ஜ. துணைத்தலைவர் பழனியப்பன் வெட்டிக்கொலை ... பெரும் பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்னகர் அல்லி அர்ஜுனா நகரைச் சேர்ந்த பழனியப்பன் (34) கட்டுமானத் தொழிலாளி மற்றும் பா.ஜ. சாக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவராக இருந்தார். நேற்று அவர் பொன்னகர் பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளைப் பார்வையிட மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை வழிமறித்தது.
அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் பழனியப்பனை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பலத்த காயங்களால் அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில், அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!