‘போட்றா விசிலை...’ இன்று தொடங்குகிறது ‘தமிழ் ஹாக்கி லீக்’ போட்டிகள்!

 

இன்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆக்கி திருவள்ளூர் மற்றும் ரேலா ஆஸ்பத்திரி சார்பில் 'தமிழ் ஆக்கி லீக்' போட்டிகள் துவங்குகிறது. இந்த போட்டிகள் இன்று முதல் வரும் செப்.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திறமையான ஆக்கி வீரர்கள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கி விளையாட்டின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டித் தொடர் கோலாகலமாகத் தொடங்குகிறது. 

இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் இரண்டு தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோதுவதுடன் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. தொடக்க நாளான நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் எஸ்.டி.ஏ.டி. அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பெண்களுக்கான மினி லீக் ஹாக்கி போட்டியும் தனியாக நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தத் தொடர் தமிழகத்தில் ஆக்கி விளையாட்டின் வளர்ச்சியைப் பெருமளவில் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகளைக் காணவரும் ரசிகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஸ்டேடியத்தில் செய்யப்பட்டுள்ளதால் அரங்கம் களைகட்டத் தொடங்கியுள்ளது.