பகீர் சிசிடிவி காட்சிகள்... சாப்பிட்டதும் உணவகத்தில் பணம் செலுத்திய போது இளைஞர் மயங்கி சரிந்து பலி!
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. இதில் நடுத்தர வயதுடையவர்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் சில நேரங்களில் குழந்தைகளும் கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர்.
இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.