திருச்சி பள்ளி விடுதியில் குழந்தைப் பெற்ற 10ம் வகுப்பு மாணவி!
திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு விடுதியிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பொன்மலைப்பட்டியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி விடுதி வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்கப்பட்ட சிறுமியும் சேயும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் மாணவிக்கு ஏற்பட்ட காதல் விவகாரமே இதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.