சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு !
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது “மோந்தா” என்ற பெயரில் புயலாக வலுவடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு (அக்.26) 11.30 மணியளவில் இது புயலாக மாறியது. தற்போது அந்தமான் போர்ட் பிளேரிலிருந்து மேற்கு-தென்மேற்கே, சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ளது.
புயல் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது செவ்வாய்க்கிழமை (அக்.28) மாலை, ஆந்திர கடலோரப் பகுதிகளில் — மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையில் காக்கிநாடா அருகே — தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் காற்று மணிக்கு 110 கி.மீ. வரை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நவம்பர் 2-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புயல் பாதிப்பு அபாயம் காரணமாக, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!