"பெண்களை இழிவாக சித்தரிப்பு...” - மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத் - 50 பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவி!

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தனது நடிப்பில் வெளியான "சர்கே சுனார் தேரி" என்ற பாடலில் பெண்கள் இழிவாகச் சித்தரிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இன்று மகளிர் ஆணையத்திடம் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.

சமூக வலைதளங்களிலும், மகளிர் அமைப்புகளிடமிருந்தும் எழுந்த கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆணையத்தின் முன் ஆஜரான சஞ்சய் தத், அந்தப் பாடல் வரிகள் மற்றும் சித்தரிப்பு சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்தார்.

சமீபகாலமாகத் திரையுலகில் பாடல்கள் மற்றும் வசனங்களில் பெண்களைச் சிறுமைப்படுத்துவதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்சார் போர்டு தாண்டி இத்தகைய காட்சிகள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு பாடலில் நடிக்கும் முன் அதன் தாக்கம் குறித்து நடிகர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

மகளிர் ஆணையம் சஞ்சய் தத்தின் இந்தச் செயலை ஏற்றுக்கொண்டாலும், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.