மிஸ் பண்ணாதீங்க... இன்று சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்.. நாளை மறுமார்க்கமாக இயக்கம்!

 

வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் சொந்த ஊர் நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தென்னக ரயில்வே சார்பில் வார பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் முக்கிய அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று சென்னை எழும்பூரில் இருந்து இன்று கன்னியாகுமரி வரை சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுத் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி வழியாகக் கன்னியாகுமரியைச் சென்றடையும். 

மறுமார்க்கமாக நாளை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு இதே முக்கிய வழித்தடங்கள் வழியாகச் சென்னை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த வார இறுதி பயணத் திட்டத்தில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது  பயணத்தை எவ்விதத் தடையுமின்றி மகிழ்ச்சியாக மேற்கொள்ளலாம்.