undefined

 போதையால் சீரழியும் தமிழகம்...  குடிப்பதற்கு கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு! 

 
 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  வடக்குத் திட்டங்குளம் பகுதியில் வசித்து வருபவர்  61 வயது சுப்பையா மகன் வேலுச்சாமி . இவர்  தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில்  சம்பவத்தன்று இலுப்பையூரணி மாடசாமி கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மது குடிப்பதற்காக ரூ.300ஐ பறித்துச் சென்றதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவர்  சத்தம் போட்டதும் அந்த இருவரும் தப்பியோடிவிட்டனா்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட  புகாரின்பேரில்  காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து  வடக்கு புதுகிராமம் 2ம் தெருவில் வசித்து வரும்  முத்தையா மகன் கஜேந்திரன் என்ற கஜி , மூக்கரை விநாயகா் கோயில் தெரு, துரைராஜ் காம்பவுன்டு தா்மராஜ் மகன் துரைராஜ்  இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!