கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் மெகா சாதனை!

 


உலகின் மிக உயரமான இமயமலையின் நேபாளம்-திபெத் எல்லையில் அமைந்துள்ள 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி, ஒவ்வொரு மலையேற்ற சீசனிலும் பல்லாயிரக்கணக்கான சாமானிய வீரர்கள் தங்களது புதிய சாதனைகளைப் பதிவு செய்யப் பப்பரப்பாய் பயணிப்பது வழக்கமாகும். அந்த வகையில், தற்பொழுது நேபாளத்தில் நடைபெற்று வரும் நடப்பு வசந்தகால மலையேற்ற சீசனில், ஒட்டுமொத்த உலகையே அடியோடு வியப்பில் ஆழ்த்தும் வகையிலான ஒரு மாபெரும் அசாத்திய விசித்திர உன்னத வரலாற்றுச் சாதனை விறுவிறுப்பாகப் பதிவாகியுள்ளது.

உடலில் கால்கள் இல்லாத இக்கட்டான நிலையிலும், வெறும் கைகளை மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தி கடந்த மே 20 ஆம் தேதி நேபாள நேரப்படி காலை 8:16 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குச் சென்று ருஸ்தம் நபீவ் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார்.